இனி அழுது புலம்பி என்னாக போகுது – சோகத்தை  மூட்டை கட்டி நடிகை மீனா வெளியிட்ட பதிவு!!

0
இந்த வருஷம் அவர் கூட இருக்க கொடுத்து வைக்கல.., மீனாவின் திருமண நாள் பதிவு! கண்ணீர் வடிக்கும் ரசிகர்கள்!!

நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் அண்மையில் உயிரிழந்த நிலையில், தொடர்ந்து சோகத்தில் இருந்து மீனா, முக்கியமான பதிவு ஒன்றை போட்டுள்ளார்.

மீனா பதிவு:

கோலிவுட்டில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை மீனா. தொடர்ந்து ரஜினி, கமல், விஜயகாந்த், அஜித் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் படங்களில் நடித்தார். வித்யாசாகர் என்ற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்ட இவருக்கு நைனிகா என்ற ஒரு பெண் குழந்தை உள்ளது. உடல்நலக்குறைவால் அவரது கணவர் வித்யாசாகர் அண்மையில் மறைந்தார்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

கணவர் இறப்புக்கு பின் நிலைகுலைந்து போன மீனா, தொடர்ந்து சோகத்தில் இருந்து வெளியே வர முடியாமல் தத்தளித்து வருகிறார். இந்த நிலையில், தனது குழந்தை பருவ புகைப்படங்கள் முதல் தற்போதைய ரீசன்ட் போட்டோ வரை ஒரு வீடியோவாக எடுத்து, வாழ்க்கை என்பது ரோலர் கோஸ்டர் மாதிரி, இந்த நொடி தான் உங்களுக்கு நிலையான வாழ்க்கை  என உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

இதை பார்த்து ரசிகர்கள், கணவரை இழந்த சோகத்தில் இருந்து மீள முடியாமல் மீனா இவ்வாறு பதிவிட்டுள்ளதாக தங்களது ஆதங்கத்தை கொட்டி தீர்த்து வருகின்றனர். மேலும், இனி அவர் தன் விதியை நினைத்து புலம்பாமல் விரைவில் தன் இயல்பு நிலைக்கு திரும்புவார் என நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Meena Sagar (@meenasagar16)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here