தமிழ் சினிமாவின் பிரபல வில்லன் நடிகரான மன்சூரலிகான், நிலம் வாங்குவதற்காக ஒருவரிடம் 50 லட்சம் பணத்தைக் கொடுத்து ஏமாந்து போனதாக காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
நடிகர் புகார் :
கோலிவுட் சினிமாவின் முன்னணி வில்லன் நடிகராக வலம் வந்தவர் நடிகர் மன்சூர் அலிகான். இவர் விஜயகாந்த், விஜய், சரத்குமார் என பல முன்னணி பிரபலங்களுடன் நடித்துள்ளார். நடிகர் விவேக் இறப்பிற்கு காரணம், கொரோனா தடுப்பூசி தான் என இவர் பேசியது மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் இவர் கைதாகி நீதிமன்ற தண்டனையைப் பெற்றார். தற்போது, அரசியலில் தீவிரமாக ஈடுபட்டு வரும் இவர் தமிழ் தேசிய புலிகள் என்ற கட்சியை ஆரம்பித்து தீவிரமாக செயல்பட்டு வருகிறார்.
தற்போது இவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார். அதாவது, வரிசை கனி என்பவரிடம் நிலம் வாங்குவதற்காக 50 லட்ச ரூபாய் பணத்தை கொடுத்து ஏமாந்து நிற்பதாக தெரிவித்துள்ளார். மேலும், தனது பணத்தை மீட்டுத் தர வேண்டும் என்றும் அந்த புகாரில் குறிப்பிட்டுள்ளார். இந்த சம்பவம் கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்