அதுலயே நான் செத்துட்டேன்.., இதுல எப்படி..,வாய்ப்பே இல்ல., ஜெய் பீம் பட புகழ் மணிகண்டன் ஓபன் டாக்!!!

0
அதுலயே நான் செத்துட்டேன்.., இதுல எப்படி..,வாய்ப்பே இல்ல., ஜெய் பீம் பட புகழ் மணிகண்டன் ஓபன் டாக்!!!
அதுலயே நான் செத்துட்டேன்.., இதுல எப்படி..,வாய்ப்பே இல்ல., ஜெய் பீம் பட புகழ் மணிகண்டன் ஓபன் டாக்!!!

நடிகர் மணிகண்டன் நடித்த குட் நைட் திரைப்படம் திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் ஜெய் பீம் 2 குறித்து பேசியது வைரலாக பரவி வருகிறது.

நடிகர் மணிகண்டன்:

சின்னத்திரையில் என்ட்ரி கொடுத்து தற்போது வளர்ந்து வரும் நடிகராக உருவெடுத்திருப்பவர் தான் நடிகர் மணிகண்டன். இவர் ஆரம்பத்தில் சைடு கேரக்டரில் நடித்திருந்தாலும், தற்போது ஹீரோவாக நடிக்கும் அளவுக்கு உயர்ந்துள்ளார். அதற்கு முக்கிய காரணம் இவர் நடித்த ஜெய் பீம் திரைப்படம் தான். இப்படத்தில் தனது எதார்த்தமான நடிப்பை காட்டி ரசிகர்களின் மனதை அதிகம் கவர்ந்தார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

தற்போது இவர் நடித்த குட் நைட் திரைப்படம் திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. வெறும் குறட்டையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் ஜெய் பீம் பார்ட் 2 குறித்து சுவாரஸ்யமாக பேசியுள்ளது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

நீயெல்லாம் மனுஷனா.., அன்னியிடம் அத்துமீறும் கதிர்.., ஆத்திரத்தில் ஞானவேல் செஞ்ச செயல்.., அடுத்து நடக்கும் விபரீதம் என்ன??

அதாவது நடிகர் மணிகண்டன் பேட்டியில் தொடர்ந்து பேசிய போது, தொகுப்பாளர் “ஜெய் பீம் 2 எடுத்தால் நடிப்பீர்களா?” என்று கேள்வி எழுப்பினார். அதற்கு அவர், அது எப்படி முடியும் நான் தான் பர்ஸ்ட் பார்ட்லயே செத்துட்டேன்ல அப்புறம் எப்படி வர முடியும். அதனால் ஜெய் பீம் 2 எடுத்தால் நான் நடிப்பதற்கு வாய்ப்பு இல்லை என்று கூறியுள்ளார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here