விக்ரம் படத்தை தொடர்ந்து சூர்யாவின் அடுத்த வேட்டை –  சம்பளமே வாங்காமல் நடித்து அசத்தல்! நடிகர் உருக்கம்!!

0
ரோலக்ஸ் கேரக்டரை மீண்டும் கையிலெடுக்கும் சூர்யா -  பிரம்மாண்ட இயக்குனர் படத்தில் கிடைத்த வாய்ப்பு!!

பிரபல நடிகர் மாதவன், கதை எழுதி தயாரித்த ராக்கெட்ரி தி நம்பி எஃபெக்ட் என்ற படத்தில் நடிகர் சூர்யா மற்றும் ஷாருக்கான் ஆகியோர் ஒரு ரூபாய் கூட சம்பளம் வாங்காமல் நடித்துக் கொடுத்து உள்ளனர்.

 மாதவன் நெகிழ்ச்சி :

தமிழ் சினிமாவில் முன்னணி நாயகியாக வலம் வருபவர்  நடிகர் மாதவன். இவர், இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின் முன்னாள் விஞ்ஞானியான நம்பி நாராயணன் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தை எடுத்து வருகிறார். இவரே திரைக்கதை எழுதி தயாரித்து வரும் இந்த திரைப்படம் பலரது பாராட்டுகளைப் பெற்று வருகிறது. தற்போது இந்த படத்தில், நடிகர் சூர்யா மற்றும் ஷாருக் கான் உள்ளிட்டோர் சிறப்பு தோற்றத்தில்  நடித்துள்ளனர்.

இந்த நிலையில், படம் குறித்து பேசிய நடிகர் மாதவன் நெகிழ்ச்சி செயல் ஒன்றை தெரிவித்துள்ளார். அதாவது இந்த படத்தில் நடித்ததற்காக, சூர்யா மற்றும் ஷாருக்கான் ஆகியோர் ஒரு ரூபாய் கூட வாங்கவில்லை என்றும், படப்பிடிப்புக்கு வந்த விமான செலவைக் கூட அவர்களை ஏற்றுக் கொண்டார்கள் என்றும் தெரிவித்தார். அவர்கள் என் மீது வைத்திருக்கும் அன்புக்கும் மரியாதைக்கும் நான் நன்றிக்கடன் பட்டவனாக இருப்பேன் என உருக்கமாக பேசியுள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here