குடும்பத்தோடு துபாய்க்கு குடிபெயரும் நடிகர் மாதவன் – என்ன காரணம்!!

0

சாக்லேட் பாயாக வலம் வந்த நடிகர் மாதவன் தனது மகனின் முக்கிய சாதனைக்காக குடும்பத்தோடு துபாய்க்கு குடிபெயர உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

மகனுக்காக தியாகம்:

90ஸ் காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இடத்தை பெற்றிருந்தவர் நடிகர் மாதவன். இவர் நடிப்பில் வெளிவந்த ரன், அலைபாயுதே, பிரியமான தோழி, மின்னலே, இறுதி சுற்று உள்ளிட்ட பல படங்கள் இன்றும் அவரது பெருமையை நிலைநிறுத்துகிறது. இவர் ரசிகைகளின் மனதில் அழிக்க முடியாத சாக்லேட் பாயாக வலம் வந்தார். தற்போது, இவர் தனது மகன் வேதாந்த் மாதவன் வருங்காலத்திற்காக முக்கிய முடிவு ஒன்றை எடுத்துள்ளார்.

அதாவது, 2026 ம் ஆண்டு நடக்க உள்ள ஒலிம்பிக்கின் நீச்சல் போட்டியில் தனது மகனை பங்கேற்க செய்து ஜெயிக்க வைக்க ஒரு திட்டம் ஒன்றை வகுத்துள்ளார். அதாவது, துபாயில் உள்ள பெரிய நீச்சல் குளங்களில் தனது மகனுக்கு பயிற்சி அளிக்க திட்டமிட்டிருப்பதால், தனது மனைவி சரிதா உடன் மும்பையில் இருந்து குடிபெயர்ந்து துபாய்க்கு செல்ல திட்டமிட்டுள்ளார். மேலும் நம் நாட்டை பெருமை படுத்தும்வகையில் தன் மகன் பதக்கம் வெல்வான் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இதையடுத்து, ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here