தென்னிந்திய தமிழ் சினிமாவில் பொல்லாதவன், தோரணை, காந்தாரா, கபாலி போன்ற படங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நடிகர் கிஷோர். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தில் இவர் பாண்டிய மன்னரை காப்பாற்றும் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
அதே மாதிரி சமீபத்தில் வெளியான காந்தாரா திரைப்படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்து மக்கள் மத்தியில் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்டார். ஆனால் சில ஆண்டுகளாக இவர் தமிழ் படங்களில் நடிக்காமல் இருந்து வருகிறார். அதுமட்டுமின்றி இவர் தற்போது வெப் தொடர்களில் தொடர்ந்து ஆர்வம் காட்டி வருகிறார்.
அந்த வகையில் சமீபத்தில் நெட்ப்ளிக்ஸ் தொடரில் வெளியான தான் ஷீ ரசிகர்கள் மத்தியில் கவனிக்கத்தக்கதாக அமைந்தது. அதாவது இந்த திரைப்படம் மும்பையில் நடக்கும் போதைப்பொருள் தொடர்பான கதை என்பதால் இதில் சில ஆபாச காட்சிகள் அதிகமாக இருந்தது. இந்த ஆபாச காட்சிகளில் நடிகர் கிஷோர் புகுந்து விளையாடி இருப்பார்.
சொல்லப்போனால் பாலியல் தொழில் செய்யும் ஒரு பெண்ணிடம் அவர் அடிக்கும் லூட்டிகள் எல்லாம் முகம் சுளிக்கும் அளவுக்கு இருந்தது. இவருக்கு மார்க்கெட் குறைந்ததால் தான் இந்த மாதிரி கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்து நடிக்கிறார் என்று திரை உலகில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. மேலும் இவர் நடித்த பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் வருகிற ஏப்ரல் மாதம் வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.