சினிமாவில் இளம் நடிகரான கதிர் திருமணம் முடித்த மனைவியை குறித்து தற்போது இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் கதிர்:
கோலிவுட்டில் பரியேறும் பெருமாள், பட்டத்து யானை, பிகில் போன்ற வெற்றிப்படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் ரீச் ஆனவர் தான் கதிர். தற்போது ஆசை என்ற திரில்லர் படத்தில் நடித்து வருகிறார். இவருக்கு ஜோடியாக திவ்ய பாரதி நடிக்கிறார். இப்படம் அடுத்தாண்டு வெளியாகலாம் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் கதிரின் மனைவி குறித்து முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
அதாவது கடந்த 2018ம் ஆண்டு மார்ச் மாதம் பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்டு, தொழிலதிபர் வாசுதேவன், ஜெயந்தி தம்பதிகளின் மகளான சஞ்சனாவை நடிகர் கதிர் திருமணம் செய்து கொண்டார். சஞ்சனா பிசினஸ் படிப்பை முடித்தவர். இவர் கதிர் படித்த பள்ளிக்கூடத்தில் படித்தார் என்றும், இந்த விஷயம் நிச்சயதார்த்தம் அன்று தான் தெரியும் என்று புன்னகையுடன் ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார்.
ச்சீ.., இப்படி ஒரு ஆளையா கல்யாணம் பண்ணிக்கிட்டேன்.., கோபியை அசிங்கப்படுத்திய ராதிகா!!
அவரின் திருமணத்திற்கு ஏகப்பட்ட நட்சத்திரங்கள் கலந்து கொண்டு வாழ்த்துக்களை தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் நடிகர் கதிருக்கு திருமணம் ஆனதை தெரிந்த அவருடைய ரசிகர்கள் சோகத்தில் இருந்து வருகின்றனர். தற்போது கதிரின் மனைவி புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.