நடிகர் கார்த்தியின் பொன்னியின் செல்வன் மற்றும் சர்தார் படங்களில் நடித்து முடித்ததை தொடர்ந்து அடுத்து நடிக்க இருக்கும் படம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் கார்த்திக்:
சமீபத்தில் நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான விருமன் திரைப்படம் எதிர்பாராத அளவுக்கு வசூல் சாதனை படைத்தது. இதற்கடுத்து இவரது நடிப்பில் உருவான பொன்னியின் செல்வன் படத்தின் பாகம் ஒன்று வருகிற செப் 30 தேதி வெளியாக உள்ளது. இந்த படத்தின் புரமோஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கார்த்தி நடிக்கக்கூடிய அடுத்த திரைப்படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
விருமன் திரைப்படத்தில் இரண்டு பாடல்களை எழுதியுள்ள ராஜுமுருகன் கார்த்தியின் அடுத்த படத்தை இயக்க உள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் இப்படத்திற்கு ஜப்பான் என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது இதை தொடர்ந்து நடிகர் கார்த்திக் இதுவரை நடிக்காத வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிக்கலாம் என ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்க்கப்படுகிறது.
என்ன யூஸ் பண்ணிகிட்டாங்க.., என்ன வச்சு பணம் பாக்குறாங்க.., கதறும் தயாரிப்பாளர் ரவீந்தர்!!
இந்நிலையில் ராஜுமுருகன் இயக்கிய ‘குக்கூ’, ‘ஜிப்ஸி’ மற்றும் ’ஜோக்கர்’ ஆகிய படங்கள் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் அவருடைய அடுத்த படத்திற்கு நல்ல எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தின் ஷூட்டிங் வருகிற அக்டோபர் மாதம் 5-ஆம் தேதி துவங்கவுள்ளது. இதுகுறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு கூடிய விரைவில் வெளியாகும் என்று கோலிவுட்டில் பேசப்படுகிறது.