அண்மையில் நடந்த பொன்னியின் செல்வன் பட புரொமோஷனில் நடிகர் கார்த்தி கைதி படத்தின் இரண்டாம் பாகம் குறித்த சுவாரஸ்யமான விஷயங்கள் கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் கார்த்தி:
சமீபத்தில் வெளியான விருமன் திரைப்படம் போன்ற பல வெற்றி படங்களை கொடுத்தவர் தான் நடிகர் கார்த்தி. தற்போது இவர் நடிப்பில் உருவாகிய பொன்னியின் செல்வன் திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது. மேலும் இவரின் நடிப்பில் ரசிகர்கள் எதிர் பார்த்து காத்து கொண்டிருக்கும் படம் என்றால் அது கைதி பாகம் 2 தான். இவர் எந்த நிகழ்ச்சிக்கு சென்றாலும் கைதி 2 எப்போது என்று ரசிகர்கள் கேள்வி ஏழுப்பி வருகின்றனர்.
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
இந்நிலையில் சமீபத்தில் நடந்த ஒரு இன்டெர்வியுவில் இப்படத்தை குறித்து கேட்டுள்ளனர். அதற்கு அவர் சுவாரஸ்யமான பதில்களை கூறியுள்ளார். அதாவது, தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தளபதி 67ல் மும்மரமாக இருந்து வருகிறார். அவர் அந்த படத்தை எடுத்து முடித்தவுடன் கைதி 2 படப்பிடிப்பு தொடங்கப்படவுள்ளது. மேலும் கைதி படத்தின் பட்ஜெட்டை ஒப்பிட்டு பார்க்கும் போது, இப்படம் பத்து மடங்கு அதிகமாக இருப்பதாக கூறியுள்ளார்.
இதை நான் செய்யவே மாட்டேன்..,’ – பொன்னியின் செல்வன் படத்திற்கு பிறகு மனம் திருந்திய ஏ.ஆர்.ரகுமான்!!
அதுமட்டுமின்றி விக்ரம் படத்தில் வந்த ரோலக்ஸ் கதாபாத்திரம் கைதி 2வில் டில்லியுடன் மோத இருக்கிறார் என கூறி ரசிகர்களின் எதிர்பார்பை அதிகரித்துள்ளார். அதிக பட்ஜெட்டில் உருவாக இருப்பதால் படம் கண்டிப்பாக பிரமாண்டமாக தான் இருக்கும் என்று கோலிவுட்டில் பேசப்படுகிறது.