தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தான் நடிகர் கார்த்தி. இவரது அசத்தலான நடிப்பில் திரைக்கு வந்த பொன்னியின் செல்வன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது . இதில் வந்திய தேவனாக நடித்திருக்கும் இவருக்கு ஜோடியாக நடிகை திரிஷா நடித்துள்ளார். இப்படத்தில் உள்ள ஒரு வசனத்தில் குந்தவையின் காதலில் விழுந்த கார்த்தி உயிர் உங்களுடையது தேவி என கூறி அழகாக தனது காதலை வெளிப்படுத்தியிருப்பார்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இதை பார்த்த இவரின் மனைவி வீட்டில் என்னிடம் வராத காதல், சினிமாவில் ஹீரோயின்களை பார்த்தால் மட்டும் வருமோ என கேட்டு சண்டை போட்டுள்ளாராம். மேலும் ஏன் காதல் படங்களை ஏற்று நடிக்கிறீர்கள், உங்க அண்ணனை போல வேறு வேறு கதைகளை ஏற்று நடிக்க மாட்டீர்களா என கேட்டுள்ளார். இதனால் தற்போது இவர்களுக்கு சண்டை ஏற்பட்டுள்ளது என்ற தகவலை பயில்வான் ரங்கசாமி கூறியுள்ளார்.
ஜெய் பீம் மணிகண்டனா இது? பருவ வயதில் எப்படி இருக்காரு.., அடையாளமே தெரியலையே!!
மேலும் இந்த விஷயத்தை இதற்கு முன் கார்த்திகே பிரபல டிவி சேனல் ஒன்றில் தன் மனைவி தன்னை இனி romantic filmகளில் நடிக்க கூடாது என சொல்லியிருப்பதாக கூறியிருந்தார் என பயில்வான் பேசியுள்ளார். இதனால் கார்த்தி தன் மனைவியிடம் சினிமாவில் இதுயெல்லாம் சகஜம் என கூறி அவரை சமாளித்து வருகிறாராம். கார்த்தி வாழ்க்கையில் நடந்துள்ள இந்த விஷயம் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.