நடிகர் கார்த்திக் நடத்தி வரும் உழவன் அறக்கட்டளை சார்பாக விவசாயிகளுக்கு விருதுகள் வழங்கும் விழாவில் தமிழக அரசுக்கு கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.
நடிகர் கார்த்திக்:
தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக ஜொலித்து கொண்டிருப்பவர் தான் நடிகர் கார்த்திக். கடந்த ஆண்டு வெளியான பொன்னியின் செல்வன், விருமன் மற்றும் சர்தார் என தொடர்ந்து வெற்றிப் படங்களை கொடுத்து தனது மார்க்கெட்டை உயர்த்தி கொண்டார். தற்போது ஜப்பான், பொன்னியின் செல்வன் 2 மற்றும் சர்தார் 2 போன்ற படங்களில் நடித்து வருகிறார்.கடந்த ஆண்டு போல இந்த ஆண்டு இவருக்கு வெற்றி கிடைக்குமா என்று வர போற காலங்களில் தெரிந்து விடும். மேலும் நடிப்பு ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் விவசாயிகளுக்காக உழவன் அறக்கட்டளை ஒன்றை நடத்தி வருகிறார்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
அதுமட்டுமின்றி ஆண்டுதோறும் உழவன் அறக்கட்டளை சார்பாக விவசாயிகளுக்கு விருதுகள் வழங்கும் விழாவை நடத்தி வருகிறார் கார்த்தி. அந்த வகையில் இந்த வருடம் விவசாயிகளுக்கு விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. அப்போது மேடையில் பேசிய கார்த்திக் அரசாங்கத்திடம் ஒரு கோரிக்கை விடுத்துள்ளார். அதாவது, விவசாயிகள் படும் கஷ்டங்களை ஊக்குவிக்கும் விதமாக விருதுகள் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது.
நாட்டுப்பற்றை இப்படி நிரூபிக்கிறீங்களே தர்ஷா.., இப்படி கூட பண்ணலாமா?? ரசிகர்கள் ஷாக்!!
மேலும் தங்கள் விவசாயம் செய்த பொருட்களை அங்காடி கடைக்கு கொண்டு வருவதற்கு அதிகம் கஷ்டப்படுகிறார்கள். மேலும் விவசாயி குடும்பத்தில் ஒரு பையன் இருந்தால் பெற்றோர்கள் அவருக்கு ஒரு வேலையை கொடுத்து விடுகிறார்கள். ஆனால் பையன் இல்லாத வீட்டில் ஒரே ஆளாக வேளை பார்த்து கஷ்டபடுகிறார்கள். எனவே உழவர் சந்தையிலோ, அங்காடிகளிலோ பொருட்களைக் கொண்டு சேர்க்க போக்குவரத்து தேவைப்படுகிறது. அதை அரசாங்கங்கள் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்பதை மாபெரும் கோரிக்கையாக வைக்கிறேன் என்று நடிகர் கார்த்தி கூறினார்.