நடிகர் கார்த்தி நடித்த சிறுத்தை திரைப்படத்தில் அவருக்கு குழந்தையாக நடித்த பேபி ரக்ஷனா சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் பேசியது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
பேபி ரக்ஷனா:
தென்னிந்திய தமிழ் சினிமாவில் தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து முன்னணி நட்சத்திரமாக ஜொலித்து வருபவர் தான் நடிகர் கார்த்தி. அவரின் சினிமா கேரியரில் திருப்புமுனையாக அமைந்த திரைப்படம் என்றால் அது சிறுத்தை தான். இப்படத்தில் கார்த்திக் இரட்டை வேடத்தில் நடித்து அசத்தியிருப்பார். மேலும் இப்படத்தில் ரசிகர்களை அதிகம் கவர்ந்த கேரக்டர் என்றால் அது பேபி ரக்ஷனா தான்.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
அவரின் Cute முகமும், துறுதுறுவென நடிப்பை பார்த்து தான் இவருக்கு மணிரத்னம் கடல், ஓ காதல் ஓ கண்மணி என்ற இரண்டு படங்களில் நடிக்க வாய்ப்பு கொடுத்துள்ளார். தற்போது எந்த படத்திலும் நடிக்காமல் படிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் சினிமாவில் நடித்தது குறித்து பேசியுள்ளார். அதாவது அவர் பேசியதாவது, ஆரம்பத்தில் விளம்பரத்தில் நடித்ததை பார்த்து தான் சிவா அவர்கள் என்னை நடிக்க அழைத்தார்.
அப்படத்தை நான் Enjoy செய்து நடித்தேன். அதனை தொடர்ந்து மணிரத்னம் சார் இயக்கிய கடல், ஓ காதல் ஓ கண்மணி படத்தில் நடித்தேன். அந்த இரண்டு படங்களிலும் நல்ல ஒரு அனுபவம் கிடைத்தது. மேலும் துல்கர் சார் ரொம்ப நல்லவர். என்னை நன்றாக பார்த்துக் கொண்டார். அதன் பின்னர் நடித்த யாழ் படத்தில் அதிக அளவில் கஷ்டப்பட்டேன் என்று கூறியுள்ளார். மேலும் பேட்டியை பார்த்த ரசிகர்கள், பேபி ரக்ஷனா இது, நெடுநெடுவென ஆள் அடையாளமே தெரியாத அளவுக்கு மாறிவிட்டாரே என்று கூறி வருகின்றனர்.