மணிரத்னம் இயக்கத்தில் உருவாகிக்கொண்டிருக்கும் பொன்னியின் செல்வன் படத்தை பற்றிய மாஸ் அப்டேட் ஒன்றை கார்த்தி வெளியிட்டுள்ளார். இதனால் ரசிகர்கள் பலரும் கொண்டாட்டத்தில் உள்ளனர்.
பொன்னியின் செல்வன்
பழங்கால கதையை மையமாக கொண்டு எடுக்கப்படும் திரைப்படம் தான் பொன்னியின் செல்வன். இந்த நாவல் 5 பகுதியை கொண்டிருக்கும். இந்த நூலின் ஆசிரியர் கல்கி. இது நாம் அனைவர்க்கும் தெரிந்த ஒன்று. இந்த பழங்கால கதையை மையமாக கொண்டு பொன்னியின் செல்வன் உருவாகி வருகிறது. இதனை மணிரத்னம் இயக்குகிறார்.
மேலும் இதனை லைக்கா ப்ரோடக்சன் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்திற்கு மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு இருந்து வருகிறது. ஏனெனில் திரையுலகை சேர்ந்த பல முக்கிய பிரபலங்கள் இதில் நடித்து வருகின்றனர். அது தான் மக்களுக்கு ஆர்வத்தை தூண்டிய ஒன்று.
தமிழ், மலையாள திரையுலகில் எழுத்தாளரான ஜெயமோகன், விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், பிரகாஷ் ராஜ், பிரபு, சரத்குமார், ஷாலினி, மோகன் ராமன் என முன்னணி பிரபலங்கள் பலரும் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். இந்நிலையில் இந்த படத்தில் நடிக்கும் கார்த்தி படத்தின் அப்டேட் பற்றி கூறியுள்ளார். அதாவது இந்த படம் 2 பார்ட்டாக எடுக்கப்படவுள்ளது. மேலும் 70 சதவீதம் படப்பிடிப்புகள் முடிவடைந்துள்ளது என்றும் கூறியுள்ளார். இதனால் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர்.