தமிழ் திரை உலகில் பேசப்படும் இயக்குனர்களில் ஒருவராக விளங்குபவர் இயக்குனர் மிஷ்கின். இவர் தனக்கென புது ஸ்டைலில் பல வித்தியாசமான படங்களை இயக்கி தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் தனி இடம் பிடித்தவர். அந்த வகையில் மிஷ்கின் இயக்கத்தில் 2006 ம் ஆண்டு வெளியான சித்திரம் பேசுதடி திரைப்படம், பெரும் ஹிட் கொடுத்தது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
மேலும் அந்த திரைப்படத்தை நடிகர் விஜய், இயக்குனர் மிஷ்கினுடன் தியேட்டரில் பார்த்ததாகவும், இதையடுத்து விஜய், ஏன் இந்த படத்தின் கதையை என்னிடம் சொல்லவில்லை சொல்லியிருந்தால் நான் ஆக்ட் பண்ணியிருப்பேன் என்று அவரிடம் கேட்டதாக சொல்லப்படுகிறது.
ஷாக் நியூஸ் மக்களே.., ஒரு சவரன் தங்கத்தின் விலை இவ்வளவா?? இன்றைய விலை நிலவரம் !!
அதற்கு, மிஸ்கின் நான் கதையை உங்களிடம் கூறி இருந்தால், உங்கள் தந்தை எஸ் ஏ சந்திரசேகர் கதையில் changes சொல்லிருப்பார், அது சரியாக வராது என்று சொல்லிவிட்டாராம்.
இதை தொடர்ந்து, அவர் உலக நாயகனை வைத்து புத்தர் என்ற திரைப்படத்தை இயக்க முயற்சி செய்ததாகவும், இருப்பினும் நடிகர் கமல் தசாவதாரம் படத்தில் கமிட் ஆகி விட்டதால் இந்த படத்தில் நடிக்க முடியாமல் போகிவிட்டதாகவும் தகவல்கள் கூறுகிறது. இந்நிலையில் நடிகர் விஜய்யின் நடிப்பில், புத்தர் படத்தின் கதையில் சில changes செய்து மிஷ்கின் இயக்க உள்ளாராம். இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.