தமிழ் சினிமாவில் ஜெயம் என்ற படத்தில் நடித்து கோலிவுட் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் தான் ஜெயம் ரவி. தற்போது இயக்குனர் மணிரத்னத்தின் ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் அருள்மொழி வர்மன் ஆக நடித்து அசத்தியுள்ளார். இந்நிலையில் இவர் தனியார் சேனலுக்கு பேட்டி கொடுத்துள்ளார்.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
அதில் தனது சினிமா வாழ்க்கையில் நடந்த பல மறக்க முடியாத நிகழ்வுகளை பகிர்ந்து கொண்டார். அதாவது இவர் முதன் முதலில் நடிகராக அறிமுகம் ஆன ‘ஜெயம்’ படத்திற்கு உலகநாயகன் அவர்கள் தான் கேமராவை on செய்து வைத்ததாக கூறியிருந்தார்.
மெட்ரோ பயணிகளுக்கு ஜாக்பாட்., 2 நாளைக்கு மட்டுமே இந்த ஆஃபர்! தவறாம யூஸ் பண்ணுங்க!!
மேலும் தொகுப்பாளர் ஜெயம் ரவியிடம் உங்கள் அண்ணன் மோகன் ராஜா சினிமாவில் நடிப்பாரா என்று கேட்டதற்கு, அவருக்கு முதலில் நடிப்பதற்கு தைரியம் இல்லை. ஆனால் இப்போது தைரியம் வந்துருச்சு. நிச்சயமாக இனி திரைக்கு வருவார் என கூறியுள்ளார். மேலும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் குறித்து உங்கள் கருத்து என கேட்டுள்ளார். அவர் ஒரு இயக்குனர் என்பதற்கு முன் அவர் ஒரு நல்ல மனிதர். இந்த சினிமா உலகிற்கு மிகவும் தேவையான ஒரு நபர் என்று அவரை புகழாரம் சூட்டியுள்ளார்.