வாய்ப்பு கிடைக்காமல் தத்தளிக்கும் நடிகர் ஜீவா.., வேறு வழியில்லாமல் புதிய தொழிலில் களமிறங்கிய சோகம்!!

0
வாய்ப்பு கிடைக்காமல் தத்தளிக்கும் நடிகர் ஜீவா.., வேறு வழியில்லாமல் புதிய தொழிலில் களமிறங்கிய சோகம்!!

நடிகர் ஜீவா நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படங்கள் அனைத்து தோல்வியை கண்ட நிலையில் தற்போது அவர் புதிய முயற்சியை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் ஜீவா:

தமிழ் சினிமாவின் குறிப்பிடத்தக்க இளம் நடிகர்களில் ஒருவராக திகழ்பவர் தான் நடிகர் ஜீவா. அவரின் படங்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வந்தது. அந்த வகையில் சிவா மனசுல சக்தி, என்றென்றும் புன்னகை, கோ உள்ளிட்ட கமர்ஷியல் படங்களில் நடித்து தனக்குனு ஒரு இடத்தை பிடித்து கொண்டார். ஆனால் சமீபத்தில் வெளியான எந்த திரைப்படமும் அவருக்கு கைகொடுக்கவில்லை.

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

இதனால் பல தயாரிப்பாளர்களும் அவரை வைத்து படம் எடுப்பதற்கு தயங்கி வருகிறார்கள். இப்படி ஒரு சூழ்நிலையில் இருக்கும் நடிகர் ஜீவா தற்போது என்ன செய்வது என்று தெரியாமல் குழம்பி போய் உள்ளார். இதனை தொடர்ந்து இவர் புதிய முயற்சி எடுக்கும் விதமாக சூப்பர் பாக்ஸ் என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கி இருக்கிறார்.

இந்தியன் 2 வில் இந்த விஷயம் கண்டிப்பா இருக்கும்.., கண்டிஷன் போட்ட கமல்.., அப்ப பெரிய சம்பவம் இருக்கு!!

இந்நிலையில் இவருடைய தந்தை பிரபல தயாரிப்பாளர் ஆர் பி சவுத்ரி என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் புதுமுக இயக்குனர்களுக்கு வாய்ப்பு கொடுக்க இருக்கிறாராம். அதுமட்டுமின்றி சொந்த தயாரிப்பில் எடுக்கும் படத்தில் அவர் நடிக்கவும் முடிவு செய்திருக்கிறார் என்று கூறப்படுகிறது. இதன் மூலம் மீண்டும் நடிப்பில் ஒரு ரவுண்டு வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here