பலே ஆளு பா ஜெயம் ரவி.. மகனின் பிறந்த நாளுக்காக துபாயில் நடந்த கோலாகல கொண்டாட்டம்!

0
பலே ஆளு பா ஜெயம் ரவி.. மகனின் பிறந்த நாளுக்காக துபாயில் நடந்த கோலாகல கொண்டாட்டம்!

நடிகர் ஜெயம் ரவி, தன் இரண்டாம் மகனின் பிறந்த நாளை துபாயில் கோலாகலமாக கொண்டாடி உள்ளார். அது சம்மந்தப்பட்ட புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.

பிறந்த நாள் கொண்டாட்டம்:

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்பவர் நடிகர் ஜெயம் ரவி. தனது அண்ணன் இயக்கிய ஜெயம் படத்தின் மூலம் சினிமா துறையில் காலடி பதித்தவர். அதன் பிறகு தொடர்ந்து வெற்றிப் படங்களை கொடுத்தார். இதனை தொடர்ந்து தற்போது இவர் நடித்து முடித்த பொன்னியின் செல்வன் திரைப்படம் கூடிய விரைவில் வெளியாக இருக்கிறது.

பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு  முடிந்ததால் குடும்பத்துடன் துபாய்க்கு சுற்றுலா சென்றுள்ளார். அங்கு எடுக்கப்பட்ட வீடியோ மற்றும் புகைப்படங்களை அவரது மனைவி ஆர்த்தி இன்ஸ்டாவில் தொடர்ந்து பதிவிட்டு வருகிறார். நடிகர் ஜெயம் ரவி – ஆர்த்தி தம்பதியருக்கு ஆரவ் மற்றும் அயான் என இரண்டு மகன்கள் இருக்கின்றனர். மூத்த மகன் ஆரவ் மக்களுக்கு அறிமுகமான முகம் தான், அதாவது டிக் டிக் டிக் என்ற படத்தில் முக்கிய ரோலில் நடித்து கலக்கிருப்பார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

தற்போது துபாய் சென்றுள்ள நிலையில் ஜெயம் ரவியின் இரண்டாவது மகன் அயானுக்கு 8-வது பிறந்தநாள் வந்த நிலையில் அதனை கோலாகலமாக கொண்டாடி உள்ளனர் இந்த தம்பதி. மேலும் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் எடுத்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் அனைத்தையும் ஆர்த்தி தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டு உள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Aarti Ravi (@aarti.ravi)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here