நடிகர் ஜெயம் ரவி, இயக்குனர் அகமது இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வரும் நிலையில், அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் படப்பிடிப்பு பாதிலேயே நிறுத்தப்பட்டுள்ளது.
பாதியில் நிறுத்தம்:
நடிகர் ஜெயம் ரவி தனது பூமி படத்தை தொடர்ந்து இயக்குனர் அகமது இயக்கத்தில் ஜன கன மன என்ற படத்தில் நடித்து வந்தார். இந்த படத்தின் அனைத்து பணிகளும் நிறைவடைந்துள்ள நிலையில், போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும், இவர் நடிப்பில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது. இந்த நிலையில், நடிகர் ஜெயம் ரவி, அகமது இயக்கத்தில் ஒரு சைக்கோ த்ரில்லர் படத்தில் நடிக்கவுள்ளதாகவும், அவருக்கு ஜோடியாக நடிகை நயன்தாராவை நடிக்க வைக்க உள்ளதாகவும் பேசப்பட்டு வந்தது.
இந்த படப்பிடிப்பில் கலந்து கொண்ட நடிகர் ஜெயம் ரவிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. அவரை பரிசோதனை செய்து பார்த்ததில், அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், சென்னையில் நடத்தப்பட்டு வந்த இந்த படத்தின் படப்பிடிப்பு பாதிலேயே நிறுத்தப்பட்டுள்ளதாக பேசப்பட்டு வருகிறது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்