நடிகர் சிம்புவுடன் இணைந்து கவுதம் கார்த்திக் நடிப்பில் வெளியான ‘பத்து தல’ திரைப்படம் விமர்சனம் மற்றும் வசூல் ரீதியாக நல்ல வரவேற்புகளை பெற்று வருகிறது. இந்த திரைப்படத்திற்கு கிடைத்த வரவேற்புகளை தொடர்ந்து நடிகர் கவுதம் கார்த்திக் மீண்டும் ஒரு முன்னணி நடிகருடன் கை கோர்க்க இருப்பதாக அறிவிப்புகள் வெளியாகியுள்ளது.
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
அதாவது, நடிகர் ஆர்யா மற்றும் கவுதம் கார்த்திக் இருவரும் இணைந்து புதிய திரைப்படம் ஒன்றில் நடிக்க இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளது. ‘மிஸ்டர் எக்ஸ்’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தை பிரபல இயக்குனர் மனு ஆனந்த் இயக்க இருக்கிறார்.
தொடர்ந்து அதிரடி காட்டும் பஞ்சாப் அணி…..,4 முறை 200+ ரன்கள்….,இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே….,
இயக்குனர் மனு ஆனந்த் ஏற்கனவே எப்.ஐ.ஆர் என்ற திரைப்படத்தை இயக்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது ஆக்ஷன், த்ரில்லர் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த படத்தில் நடிகர் கவுதம் கார்த்திக், ஆர்யாவுக்கு வில்லனாக நடிக்க இருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளது.