நடிகர் கௌதம் கார்த்திக் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
நடிகர் கௌதம் கார்த்திக்:
தமிழ் சினிமாவில் கடல், வை ராஜா வை போன்ற வெற்றிப் படங்களில் நடித்து பிரபலமானவர் தான் கெளதம் கார்த்திக். தற்போது நடிகர் சிம்புவுடன் இணைந்து “பத்து தல” படத்தில் தீவிரமாக நடித்து வருகிறார். ரசிகர்களின் பெரிய எதிர்பார்ப்பில் இருக்கும் இந்த திரைப்படம் அடுத்த மாதம் டிசம்பர் 14ம் தேதி வெளியாக இருக்கிறது.
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
இந்நிலையில் நடிகர் கௌதம் கார்த்திக் தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் நடிகர் சிம்புவை குறித்து பதிவிட்டுள்ளார். அதாவது பத்து தல படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுத்த புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். அதற்கு கேப்ஷனாக, என் வாழ்நாளில் இவரை மாதிரி ஒரு உண்மையான மனிதரை நான் சந்தித்ததில்லை.
மேலும் படப்பிடிப்பு தலத்தில் அவருடைய சுவாரசியமான நடிப்பு திறமையை பார்த்து வியந்தேன். அவர் எந்த இடத்திலும் தன்னுடைய குணத்தை வெளிப்படுத்துவதில் பயப்படுவதில்லை. இப்படி பட்ட ஒரு மனிதருடன் நான் பணியாற்றியதில் மகிழ்ச்சி அடைகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.