நானே வருவேன் திரைப்படத்தை தொடர்ந்து, பிசியாக நடித்து வரும் தனுஷ் குறித்து ஒரு புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
நடிகர் தனுஷ்:
தென்னிந்திய தமிழ் சினிமாவில் நடிகர், பாடகர், பாடலாசிரியர், இயக்குனர் என பன்முக திறமைகளை கொண்டவர் தான் நடிகர் தனுஷ். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான திருச்சிற்றம்பலம், நானே வருவேன் திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து வாத்தி என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இரண்டு மொழியில் உருவாகி வரும் இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 17 ஆம் தேதி திரைக்கு வருகிறது. சமீபத்தில் இப்படத்தின் டீசர் மற்றும் “வா வாத்தி” பாடல் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது குறிப்பிடத்தக்கது. இதனை தொடர்ந்து பல திரைப்படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.
ஹன்சிகா திருமண ஏற்பாடுகள் தடபுடல்.,வருங்கால கணவருடன் உச்சகட்ட கொண்டாட்டம் – வைரல் போட்டோ!!
இந்த நிலையில் இவர் குறித்து ஒரு புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது. அதாவது திருச்சிற்றம்பலம் திரைப்படத்தில் நடிக்கும் போது எடுத்த அன்சீன் புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. அந்த போட்டோவுக்கு நிஜமா நான் செஞ்ச பாவம் என கேப்ஷன் கொடுத்துள்ளார்.
View this post on Instagram