இந்திய திரையுலகில் நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர், பாடலாசிரியர், பாடகர் என பன்முக திறமையோடு முன்னணி நடிகராக இருப்பவர் தான் தனுஷ். இவர் கோலிவுட்டில் மட்டும் 40க்கும் மேற்பட்ட படங்களில் ஹீரோவாக நடித்து அசத்தியுள்ளார். மேலும் இவர் சிறந்த நடிகருக்காக 4 தேசிய விருதுகளையும் பெற்றுள்ளார்.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இந்நிலையில் இவரின் வாத்தி திரைப்படம் மக்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே வரும் பிப்ரவரி மாதம் திரைக்கு வரவுள்ளது. மேலும் இவரின் கேப்டன் த்ரில்லர் திரைபடத்தின் படப்பிடிப்பு எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நேரத்தில் தனுஷ் மீண்டும் படம் இயக்க போவதாக தகவல் பரவி வருகிறது.
மீண்டும் பாலியல் வழக்கில் சிக்கிய பிரபல நடிகர்.., அதிர்ச்சியில் திரையுலகம்!!
அதில் ஹீரோவாக விஷ்ணு விஷால் நடிக்க போவதாகவும் கூறப்படுகிறது. மேலும் இதற்கு முன்பாக தனுஷ் இயக்கத்தில் உருவான பவர் பாண்டி திரைப்படம் நகைசுவை கலந்த காதல் படமாக அமைந்தது. இந்த நிலையில் தனுஷ் மீண்டும் இயக்குனராக களமிறங்கப்போவதாக கிடைத்த தகவல் ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது.