நடிகர் தனுஷ் மீண்டும் வெற்றி இயக்குனருடன் கைகோர்க்க இருப்பதாக சமூக வலைத்தளங்களில் ஒரு முக்கியமான அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.
நடிகர் தனுஷ்:
தென்னிந்திய தமிழ் சினிமாவில் பாடகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர் இயக்குனர் மற்றும் நடிகர் என பன்முக திறன்களை கொண்டு விளங்குபவர் தான் தனுஷ். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான வாத்தி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று 100 கோடி அள்ளி வசூல் சாதனை படைத்தது.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இதை தொடர்ந்து அருண் மாதேஸ்வரன் இயக்கிவரும் கேப்டன் மில்லர் என்ற படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக போய் கொண்டிருக்கும் நிலையில், அவரின் 50 வது படத்தை தனுஷே இயக்கி நடிக்க இருப்பதாக இணையத்தில் தகவல் வெளியாகின. இந்த நிலையில் இப்படங்களை தொடர்ந்து அடுத்ததாக சேரப்போகும் கூட்டணி குறித்து இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது, தனுஷ் இயக்க இருக்கும் 50வது படத்தை தொடர்ந்து, அடுத்த படத்தில் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்க முடிவெடுத்துள்ளாராம். இதற்கு முன்னர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்த கர்ணன் திரைப்படம் மக்கள் மத்தியில் அதிகம் பேசப்பட்டது குறிப்பிடத்தக்கது.