நடிகர் தனுஷ் முன்னணி நடிகை ஒருவருடன் தொடர்பில் இருப்பதாக சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் தனுஷ்:
கோலிவுட், டோலிவுட், பாலிவுட், ஹாலிவுட் என ரவுண்டு கட்டி நடித்து வருபவர் தான் நடிகர் தனுஷ். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான நானே வருவேன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தையே பெற்றது. தற்போது தெலுங்கு இயக்குனர் வெங்கி படைப்பில் வாத்தி திரைப்படம் உருவாகியுள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகி வரும் இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 17ம் தேதி வெளியாக இருக்கிறது.
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
இதனை தொடர்ந்து அடுத்த மூன்று படங்களும் தெலுங்கு இயக்குனர்கள் இயக்க இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கு முழு காரணம் நடிகை சாய் பல்லவி தான் என்று கோலிவுட்டில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. இப்படி முன்னணி நடிகராக இருக்கும் தனுஷ், சாய் பல்லவி பேச்சை கேட்டு நடப்பது திரைத்துறையினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கவுண்டமணியால் வாழ்க்கை இழந்த அந்த நடிகை..,உண்மையை உடைத்து பேசிய பயில்வான்!!
மேலும் சாய் பல்லவியுடன் தனுஷ் தொடர்பில் இருக்கிறார் என்று கிசுகிசுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மீண்டும் தனுஷ் படத்தை இயக்க இருக்கிறார் என்ற தகவல் வெளியான நிலையில், அந்த படம் தெலுங்கு படமாக இயக்க இருப்பதாக கூறப்படுகிறது. இப்படி ஒரேடியாக தெலுங்கு பக்கம் சாய்ந்த தனுஷால் ரசிகர்கள் கவலை பட்டு வருகின்றனர். மேலும் இப்படி வந்தந்திகள் வருவதால் ஐஸ்வர்யாவின் நிலைமை என்ன என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.