‘தனுசு நம்பி ஏமாந்தது தான் மிச்சம்’ – புலம்பித் தவிக்கும் முக்கிய பிரபலம்!!

0

நடிகர் தனுஷுடன் இணைந்து பணியாற்றுவதற்காக, கிட்டத்தட்ட 2 ஆண்டுகள் வரை கதையை தயார் செய்து வந்த, பிரபல இயக்குனர் ராம்குமார், நடிகர் தனுஷ் எடுத்த முடிவால், தற்போது நிர்க்கதியில் நிற்பதாக தகவல் கிடைத்துள்ளது .

புலம்பும் இயக்குனர்:

ஐஸ்வர்யா உடனான, விவாகரத்து முடிவுக்கு பிறகு தனுஷ் தனது சினிமா வேலைகளில் பிஸியாக உள்ளார். ஓடிடி தளத்தில் வெளியான இவரது 3 படங்களும் எதிர்பார்த்த அளவு வெற்றி அடையாததால், இவர் மிகுந்த சோகத்தில் உள்ளதாக பேசப்படுகிறது. இதனால், தன் நடிப்பில் உருவாகிவரும் வாத்தி, திருச்சிற்றம்பலம், நானே வருவேன் உள்ளிட்ட படங்களின் மீது அதீத கவனம் செலுத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில், ராட்சசன் மற்றும் முண்டாசுப்பட்டி ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் ராம் குமாருடன் இணைந்து, இவர் பணியாற்ற உள்ளதாக பேசப்பட்டது.

இதற்காக, கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் வரை உழைத்து பெரிய கதையை ராம்குமார் தயார் செய்ததாகவும், ஆனால் தற்போது இந்த கதையில் நடிகர் தனுஷ் நடிக்க மறுப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனால், தனுஷை நம்பிக்கொண்டிருந்த இயக்குனர் ராம்குமார், தற்போது புலம்பிக் கொண்டிருக்கிறாராம். தனுஸ் மறுத்த இந்த கதையில், வேறொரு முக்கிய பிரபலத்தை நடிக்க வைத்து, படத்தை ஹிட் செய்ய ராம்குமார் முடிவெடுத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இது குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here