தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான தீபா என்கிற பவுலின், நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில், அவரது வழக்கில் தற்போது திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.
வழக்கில் திருப்பம் :
தமிழில் வாய்தா என்ற படத்தின் மூலம், அறிமுகமானவர் நடிகை தீபா என்கிற பவுலின். 29 வயதான இவர் திரைப்பட நடிகையாகவும், ரீல்ஸ் பிரபலமாகவும் திகழ்ந்து வந்தார். இவர் ராட்சசன், தெறி, துப்பறிவாளன் உள்ளிட்ட பல படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். நேற்று மதியம் சென்னை, விருகம்பாக்கத்தில் உள்ள அப்பார்ட்மெண்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸ், நடிகையின் இறுதி கடிதத்தை கைப்பற்றி விசாரணையை துவக்கினர். காதல் பிரச்சனையால் நடிகை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக அந்த கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
இந்த நிலையில் நடிகையின், உயர்ரக ஐ-போன் திருடு போய் உள்ளதாகவும், அதை தீபா காதலித்து வந்ததாக சொல்லப்படும் உதவி இயக்குனர் சிராஜுதீன் நண்பர் எடுத்து சென்று விட்டதாகவும் தீபாவின் அண்ணன் குற்றம் சுமத்தியுள்ளார். இதனால் போலீசார் சிராஜுதீன் உட்பட சிலர் மீதான விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.