நடிகர் உதயநிதி நடித்த கண்ணை நம்பாதே திரைப்படம் குறித்து நடிகர் கூல் சுரேஷ் பேசியது இணையத்தில் படு வைரலாக பரவி வருகிறது.
கண்ணை நம்பாதே:
தமிழ் சினிமாவில் நடிகர், தயாரிப்பாளர் மற்றும் அரசியல்வாதி என பன்முக திறன்கான் கொண்டவர் தான் உதயநிதி ஸ்டாலின். தற்போது இவர் நடித்த கண்ணை நம்பாதே திரைப்படம் இன்று தியேட்டரில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தை நடிகர் கூல் சுரேஷ் செங்கலுடன் படத்தை பார்க்க தியேட்டருக்கு சென்றுள்ளார்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். அதாவது அவர் பேசியதாவது, இந்த மாதிரி ஒரு படத்தை செலக்ட் பண்ணி நடித்ததற்கு உதயநிதி அவர்களுக்கு என்னுடைய நன்றி. மேலும் படம் அற்புதமாக இருக்கிறது. படக்குழுவினருக்கு என்னுடைய வாழ்த்துக்கள். படத்தில் பெரிய சோசியல் மெசேஜ் இருக்கு, கண்டிப்பா எல்லாரும் படத்தை பார்க்கலாம் என்று கூறியுள்ளார்.
திடீரென விஜய்யின் “LEO” படத்தின் ஷூட்டிங் நிறுத்தம்…,இணையத்தில் வெளியான அதிர்ச்சி தகவல்!!
அதுமட்டுமின்றி உதயநிதியை செங்கல் நாயகன் என்று குறிப்பிட்டு பேசியுள்ளார். தற்போது அவர் பேசிய வீடியோ இணையத்தில் படு வைரலாக பரவி வருகிறது. இப்பொழுது உதயநிதி மாமன்னன் படத்தில் நடித்து வருகிறார். இதுவே அவரின் கடைசி திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.
View this post on Instagram