கோலிவுட்டின் காமெடி நடிகரும், சிம்புவின் தீவிர ரசிகரமான கூல் சுரேஷ் தன் வாழ்க்கையில் 25 வருடங்களாக அனுபவித்து வரும் சோகங்களை கண்ணீருடன் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
கூல் சுரேஷ் கண்ணீர் :
தமிழ் சினிமாவில் காமெடி பிரபலமாக அறிமுகமாகியவர் கூல் சுரேஷ். கடந்த சில தினங்களுக்கு முன் ஷங்கர் மகள் அதிதி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசி பிரச்சனையில் மாட்டினார். நடிகர் சிம்புவின் தீவிர ரசிகரான இவர், வெந்து தணிந்தது காடு படத்திற்காக, பெரிய அளவில் ப்ரோமோஷன் செய்தார். செல்லும் இடமெல்லாம் வெந்து தணிந்தது காடு., சிம்புக்கு வணக்கத்தை போடு என பஞ்ச் பேசி அசத்தினார்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
இந்த நிலையில் படம் வெளியான நாளன்று, இவருக்கு மிகப்பெரிய பிரச்சனை ஏற்பட்டது. சிலர் அவரின் காரை உடைத்து நொறுக்கினர். இது குறித்து பதிவிட்ட கூல் சுரேஷ், என்னதான் யூடியூபில் பிரபலமாக இருந்தாலும் வாடகை கொடுக்க கூட பணம் இல்லாமல் சிரமப்பட்டு வருகிறேன்.
இப்போ இல்ல, கடந்த 25 ஆண்டுகளாக இந்த பிரச்சனைகளை சமாளித்து வருகிறேன், எல்லோரும் சேர்ந்து ஏன் இப்படி பண்றீங்க, உங்களுக்கு நான் என்ன பாவம் பண்ணேன் என கண்ணீர் மல்க பேசினார். இவரின் இந்த உருக்கமான பேச்சு, தற்போது சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகி வைரலாகி வருகிறது.