லட்சத்தீவை சேர்ந்த பிரபல நடிகையும், மாடலுமான ஆயிஷா சுல்தானா மீது, சுமத்தப்பட்டிருந்த தேசத்துரோக வழக்கு விசாரணைக்கு கேரள உயர்நீதிமன்றம் அதிரடி தடை விதித்துள்ளது.
அதிரடி உத்தரவு :
கடந்த கொரோனா காலகட்டத்தில், லட்சத்தீவுவை சேர்ந்த பிரபல மாடலிங் நடிகையான ஆயிஷா சுல்தானா மத்திய அரசுக்கு எதிராக அவதூறு கருத்து ஒன்றைத் தெரிவித்தார். அதாவது, கேரள தொலைக்காட்சி ஒன்று நடத்திய பேட்டியில் கலந்து கொண்ட இவர், கொரோனா வைரஸ் லட்சத்தீவு மக்களுக்கு எதிரான உயிரி ஆயுதமாக மத்திய அரசு பயன்படுத்தி வருவதாக தெரிவித்தார். நாடெங்கிலும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இவரின் கருத்து, உண்மைக்குப் புறம்பானது என கூறி, பாஜகவின் லட்சத்தீவு பிரிவு தலைவர் அப்துல் காதர் கவரட்டி காவல்துறையில் நடிகைக்கு எதிராக புகார் அளித்தார்.
இதனால், அவர் மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இது குறித்த விசாரணை, ஏதும் நடைபெறாமல் இருந்த நிலையில், தேசத்துரோக வழக்குகளின் தன்மை குறித்து பரிசீலித்து, அதன்பின் முடிவை அறிவிப்பதாக கூறி உச்சநீதிமன்றம் தேசத்துரோக வழக்குகளை நிறுத்தி வைத்துள்ளது. இதனால், இவர் மீதான தேசத்துரோக வழக்கு விசாரணைக்கு தற்போது கேரள உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்