ஆர்யாவுக்கு கால் பண்ணா போதும்.., இதான் நடக்கும்.., மேடையில் உண்மையை உடைத்த ரேஷ்மி!!

0
ஆர்யாவுக்கு கால் பண்ணா போதும்.., இதான் நடக்கும்.., மேடையில் உண்மையை உடைத்த ரேஷ்மி!!
ஆர்யாவுக்கு கால் பண்ணா போதும்.., இதான் நடக்கும்.., மேடையில் உண்மையை உடைத்த ரேஷ்மி!!

நடிகர் பாபி சிம்ஹா நடித்த வசந்த முல்லை திரைப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் அவருடைய மனைவி ஆர்யாவை குறித்து பேசியது வைரலாக பரவி வருகிறது.

வசந்த முல்லை:

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் பாபி சிம்ஹா. அந்த வகையில் இவர் நடித்த ஜிகர்தண்டா, சூதுகவ்வும், பேட்ட, மகான் போன்ற திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. குறிப்பாக ஜிகர்தண்டா திரைப்படம் பாபி சிம்ஹா சினிமா கேரியரில் திருப்புமுனையாக அமைந்தது என்றால் அது மிகையாகாது. அதனை தொடர்ந்து பல படங்களில் நடிக்க தொடங்கினார்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

கடந்த மாதம் இவர் நடிப்பில் வெளியான வல்லவனுக்கும் வல்லவன் திரைப்படம் சுமாரான விமர்சனங்களை பெற்றது. தற்போது தனது மனைவி தயாரிப்பில் வசந்த முல்லை படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை ரமணன் புருஷோத்தமன் இயக்க சிவப்பு மஞ்சள் பச்சை திரைப்படத்தில் நடித்த நடிகை காஷ்மிரா ஜோடியாக நடித்திருக்கிறார். மேலும் படத்தில் ஆர்யா முக்கிய கதாபாத்திரத்தில் தோன்றுகிறார். இந்த நிலையில் ட்ரைலர் வெளியீட்டு விழாவில் பாபி சிம்ஹா மனைவி ஆர்யாவை குறித்து பேசியது வைரலாக பரவி வருகிறது.

விஜய் டிவி புது சீரியலில் என்ட்ரியாகும் தளபதி அப்பா எஸ்ஏசி., அதுவும் இந்த டாப் பிரபலத்தின் கூட்டணியிலயா?

அவர் பேசியதாவது, எனது கணவர் பாபி சிம்ஹா பெங்களூர் நாட்கள் படத்தில் ஆர்யாவுடன் சேர்ந்து நடித்தார். அப்போது அவர்களுக்குள் நல்ல நட்பு ஏற்பட்டது. இப்படத்தில் முக்கிய ரோலில் நடிக்க பாபி கால் பண்ண போது, என்ன கதை ஹீரோவா வில்லனா என்று எதுவும் கேட்காமல் பண்ணலாம் Darling என்று கூறினார். அவர் எப்போது போன் எடுத்து பேசினாலும் darling என்று தான் பேசுவார் என பாபி மனைவி நெகிழ்ச்சியுடன் கூறினார். இந்த திரைப்படம் தமிழ் கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளில் வருகிற பிப்ரவரி 10ம் தேதி வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here