தனுஷ், ஐஸ்வர்யா விவாகரத்திற்கு காரணமே அனிருத் தான் – பயில்வான் ரங்கநாதன் ஓபன் டாக்!!

0

கடந்த இரண்டு நாளாக இணையத்தில் மிகவும் வைரலாக பரவி வரும் செய்தியாக இருப்பது நடிகர் தனுஷ் மற்றும் அவரது மனைவியின் விவாகரத்து செய்தி. தற்போது இது தொடர்பான மேலும் ஒரு தகவல் இணையத்தில் பரவி வருகிறது.

நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா தனுஷ் விவாகரத்து:

தமிழ் சினிமாவின் வெற்றி நாயகனாக வலம் வந்து கொண்டு இருப்பவர் நடிகர் தனுஷ். இவருக்கு தமிழ் திரையுலகை தாண்டி ஹிந்தி படத்தில் நடிக்கும் அளவிற்கு முன்னேறி விட்டார். இப்பொழுது சோசியல் மீடியா முழுக்க இருக்கும் அதிகப்படியான டாக் என்னவென்றால் தனுஷ், ஐஸ்வர்யா தம்பதிகளின் விவாகரத்து விஷயம் தான். இது தனுஷின் ரசிகர்களை பெரிதும் பாதித்தது. சினிமா பிரபலங்கள் மற்றும் அவரது ரசிகர்களும் அவர்களுக்கு அறிவுரை கூறி வருகின்றனர். மேலும் இந்த விவகாரம் வெளிவந்து மூன்று நாட்கள் ஆன போதும் ஒரு முடிவுக்கு வராமல் சென்று கொண்டே உள்ளது.

இந்த நிலையில் நடிகர் மற்றும் செய்தி வாசிப்பாளரான பயில்வான் ரங்கராஜன் தற்போது புதிதாக ஒன்றை கூறி வருகிறார். அது என்னவென்றால், தனுஷ் மற்றும் ஐஸ்வர்யாவின் பிரிவுக்கு காரணமாக இருந்தவர் இசையமைப்பாளர் அனிருத் தானாம். மேலும் அனிருத்தும் ஐஸ்வர்யாவும் நெருங்கிய உறவினர்கள் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே. அதை தொடர்ந்து அவர்கள் இருவரும் நெருக்கமாக எடுத்துக்கொண்ட பல போட்டோக்கள் இணையத்தில் வெளியாகி வைரலானது.

ஆனால் ஆரம்பத்தில் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாத நடிகர் தனுஷ் இதில் இருக்கும் சிக்கலை பார்த்து அவர்கள் இருவரையும் கண்டித்திருக்கிறார். ஆனால் இருவரும் நடிகர் தனுஷ்யின் பேச்சை மதிக்கவில்லை இதனால் கோபமடைந்த நடிகர் தனுஷ் அனிருத்திடம் பேசுவதை நிறுத்தி விட்டார். இது இப்பொழுது விவகாரத்தில் வந்து முடிந்துள்ளது என்று நடிகர் பயில்வான் ரங்கராஜன் தன் பங்கிற்கு தகவலை கூறியுள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here