நடிகர் பப்லு பிரித்விராஜ் 23 வயது மலேசிய பெண்ணை திருமணம் குறித்து முக்கிய தகவல் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது
திருமணம்:
தற்போது சோசியல் மீடியாவில் நெட்டிசன்களுக்கு பேசும் பொருளாக இருந்து வருவது நடிகர் பப்லு பிரித்விராஜின் இரண்டாவது திருமணம் பற்றி தான். இவர் 28 வருடங்களாக ஒன்றாக வாழ்ந்த பீனாவை விவாகரத்து செய்தார். இவர்களுக்கு அஹத் என்ற 27 வயது மகன் இருக்கும் நிலையில், பப்லு 23 வயதுடைய பெண்ணை திருமணம் செய்தது கோலிவுட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
தற்போது திருமணம் முடித்த ஷீத்தல் என்ற பெண்மணி மலேசியாவைச் சேர்ந்தவர். இவர் நடிகர் பப்லு பிரித்விராஜ் மலேசியாவில் தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்று அலைந்த போது உதவியதாக கூறப்படுகிறது. அப்போது ஏற்பட்ட உறவு நாளடைவில் காதலாக மாறி கல்யாணத்தில் முடிந்துள்ளது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
ஆனால் அவர்கள் திருமணத்திற்கு முதலில் அந்த பெண்ணின் பெற்றோர்கள் ஒப்புக் கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. அதன் பின்னர் நடிகர் பப்லு பேசி சம்மதிக்க வைத்ததாக இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் சமீபத்தில் தனது காதல் மனைவிக்காக ஒரு லட்சம் செலவில் ஹோட்டலில் ரூம் எடுத்து தங்கி அதை தங்களது இணையத்தில் பதிவிட்டது குறிப்பிடத்தக்கது.