‘சித்ராவின் நெஞ்சில் யாரோ குத்தியிருக்காங்க’ – ஹேமந்த் நண்பர்கள் மீது சந்தேகிக்கும் அசிம்!!

0

சின்னத்திரை நடிகையான சித்ரா தற்கொலை செய்துகொண்டு ஒரு வாரம் ஆன நிலையில் ஒவ்வொரு நாளும் அவரின் மரணத்திற்கான மர்மங்கள் தொடர்ந்து வெளியாகி வருகிறது. இந்நிலையில் நடிகர் அசிம் சித்ரா நெஞ்சில் அடிபட்டிருப்பதாகவும், இந்த தற்கொலையில் ஹேமந்த்தின் நண்பர்களுக்கும் பங்கு இருக்கலாம் எனவும் பேட்டியளித்துள்ளார்.

சின்னத்திரை நடிகை சித்ரா

மக்கள் டிவியில் ஆரம்பித்த சித்ராவின் திரைப்பயணம் இந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முடிவடைந்துள்ளது. 8 வருட கடின உழைப்பால் மக்கள் மத்தியில் இடம் பிடித்திருந்தார். பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் இவருக்கு ஒரு பெரும் புகழை பெற்று தந்தது. கதிர் முல்லைக்காக தான் இந்த சீரியலையே பார்க்க ஆரம்பித்தனர். இப்படி அடுத்தடுத்த நிலைக்கு உயர்ந்துகொண்டிருந்த சித்ராவிற்கு கல்யாண பேச்சு ஆரம்பித்த நாளில் இருந்தே பல பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இப்பொழுது தான் ஹேமந்த் பற்றிய ஒவ்வொரு உண்மையும் வெளியில் தெரிய வருகிறது. சித்ராவின் தோழி கூட ஹேமந்த் சரியான பொருக்கி என்றும் கூறியிருந்தார். இதனை சித்ராவிடம் அவர் சொல்ல தான் செய்திருக்கிறார். அனாலும் சித்ரா இவரை திருமணம் செய்துக்கொண்டது என்தால் என்பது தான் தெரியவில்லை. மேலும் ரக்சனை சித்ரா காதலித்து வந்ததாகவும் இருவரும் தனியாக ரிசார்ட்டில் இருந்த விடியோவை வைத்து மிரட்டியதாகவும் செய்திகள் பரவி வருகிறது.

ஹேமந்த்தின் தந்தை கமிஷனர் அலுவலகத்தில் புகார் !!

ஆனாலும் இதுவரையிலும் ரக்சனை விசாரிக்க அழைத்து சென்றதாக எந்த தகவலும் வரவில்லை. இந்நிலையில் தற்போது சித்ராவின் நண்பராகிய அசிம் திடுக்கிடும் தகவல் ஒன்றை அளித்துள்ளார். அதாவது சித்ராவின் நெஞ்சிலும் காயம் இருப்பதாக கூறியுள்ளார். கன்னத்தில் இருக்கும் காயம் சித்ராவுடையது அப்பொழுது நெஞ்சில் எப்படி அடிபட்டிருக்கும்?? என்று கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் சித்ராவின் நெஞ்சில் யாரோ குத்தி இருப்பதாக சொல்கிறார் அசிம். மேலும் இதில் ஹேமந்த்தின் நண்பர்களுக்கும் தொடர்பு இருக்கும் என கூறியுள்ளார் அசிம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here