‘அச்சம் என்பது இல்லையே’ படத்தின் ஷூட்டிங் போது நடிகர் அருண் விஜய்க்கு விபத்து ஏற்பட்டதாக இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் அருண் விஜய்:
கோலிவுட் வட்டாரங்களில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் அருண் விஜய். கிட்டத்தட்ட சினிமாவில் 20 வருடங்களுக்கும் மேலாக இருந்தாலும் அவருக்கு கோலிவுட்டில் எந்த ஒரு அடையாளமும் கிடைக்கவில்லை. சொல்லப்போனால் அருண் விஜய் என்று ஒரு நடிகர் இருக்கிறார் என்பதே பல பேருக்கு தெரியாது என்று தான் சொல்ல வேண்டும். ஆனால் ஒரே படத்தின் மூலம் ஒட்டுமொத்த சினிமாவையே புரட்டி போட்டார்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
அது அஜித் நடிப்பில் வெளியான என்னை அறிந்தால் படம் தான். இதில் அஜித்தை விட அவருக்கு அதிக மவுசு இருந்தது. அதற்கடுத்து அவருக்கு பட வாய்ப்புகள் வர தொடங்கியது. அந்த வகையில் குற்றம் 23, தடம், செக்க சிவந்த வானம் என பல ஹிட் படங்களை வரிசையாக கொடுத்தார். மேலும் இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த யானை திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று படுதோல்வி அடைந்தது.
தற்போது ஏ.எல் . விஜய் இயக்கத்தில் உருவாகி வரும் அச்சம் என்பது இல்லையே படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் படத்தின் ஷூட்டிங் போது நடிகர் அருண் விஜய்க்கு விபத்து ஏற்பட்டதாக இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது. அதாவது அச்சம் என்பது இல்லையே படத்தின் சண்டை காட்சி எடுத்த போது எதிர்பாராத விதமாக மூட்டு காயம் ஏற்பட்டது. தற்போது ஆயுர்வேத முறையில் அருண் விஜய் சிகிச்சை பெற்று வருகிறார். விரைவில் நலம் பெற்று மீண்டும் படப்பிடிப்புக்கு திரும்புவார் என்று அருண் விஜய் தெரிவித்துள்ளார்.