கோலிவுட் திரையில் வம்சம் என்ற படத்தில் ஹீரோவாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நடிகர் அருள்நிதி. இவர் நடிப்பில் கடந்த 2015 ஆண்டு திரைக்கு வந்த டிமான்டி காலனி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிந்தது. இதை தொடர்ந்து தற்போது இவர் இதன் 2 ஆம் பாகத்தில் நடித்து வருகிறார்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இந்நிலையில் இப்படத்தின் முதல் பாகத்தை இயக்கிய இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில், சாம்.சி எஸ் இசையில் இப்படம் உருவாகி வருகிறது. இதில் இவருக்கு ஜோடியாக நடிகை பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார். மேலும் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இப்படத்தின் ஷூட்டிங் ஆரம்பித்த நிலையில் தற்போது இதன் ஷூட்டிங் பணி 98 % முடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் அருள்நிதி நடித்துள்ள மற்றொரு திரைப்படமான ”கழுவேத்தி மூர்க்கன்” இந்த மாதம் 26 ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது. இந்த நிலையில் பேட்டியாளர்களுடன் சந்திப்பு வைத்துக் கொண்ட இவர், டிமான்டி காலனி 2 படத்தில் தனக்கான படப்பிடிப்புகள் முடிந்து விட்டது. மேலும் தற்போது இதன் கிராபிக்ஸ் பணிகள் நடந்து வருகிறது என அப்டேட் கொடுத்துள்ளார்.