நடிகர் அல்லு அர்ஜுன் நடித்த புஷ்பா படத்தின் வெற்றியை தொடர்ந்து அதன் இரண்டாம் பாகம் குறித்து சூப்பர் அப்டேட் இணையத்தில் வெளியாகியுள்ளது.
புஷ்பா 2:
தெலுங்கு சினிமாவில் மாஸ் காட்டி வரும் நடிகர்களில் ஒருவராக ஜொலிப்பவர் தான் நடிகர் அல்லு அர்ஜுன். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான புஷ்பா திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. நடிகர் அல்லு அர்ஜுன் ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார்.
அது தவிர பகத் பாசில், பிரகாஷ் ராஜ் போன்ற பல நடிகர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து பட்டையை கிளப்பி இருப்பர்கள். மேலும் இப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் ரசிகர்களின் ரிங்டோனாக இருந்து வந்தது. அதுமட்டுமின்றி 190 கோடிக்கு மேல் வசூலை அள்ளியது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இந்த வெற்றியை தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்து ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அதாவது புஷ்பா 2 திரைப்படம் கடந்த செப்டம்பர் மாதம் ஆரம்பிக்க இருந்த நிலையில், படத்தின் முழு திரைக்கதை தயாராகவில்லை என்பதால் டிசம்பர் மாதம் படத்தின் ஷூட்டிங் ஆரம்பிக்கப்படும் என்று கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி படப்பிடிப்பு தளத்தையும் தேர்ந்தெடுக்காத காரணத்தினால் ஷூட்டிங் தள்ளிப் போவதாக கூறப்படுகிறது.