இனி No.1 விஜய் கிடையாது.., அல்லு அர்ஜுன் தான்.., வெளியான ஷாக் தகவல்!!!

0
இனி No.1 விஜய் கிடையாது.., அல்லு அர்ஜுன் தான்.., வெளியான ஷாக் தகவல்!!!
இனி No.1 விஜய் கிடையாது.., அல்லு அர்ஜுன் தான்.., வெளியான ஷாக் தகவல்!!!

பாலிவுட் சினிமாவில் அறிமுகத்திற்காக அல்லு அர்ஜுன் அதிக சம்பளம் வாங்கியுள்ளதாக சமூக வலைத்தளங்களில் ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் அல்லு அர்ஜுன்

தெலுங்கு சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக ஜொலித்து கொண்டிருப்பவர் தான் நடிகர் அல்லு அர்ஜுன். தற்போது இயக்குனர் சுகுமார் எழுதி இயக்கி வரும் புஷ்பா 2 படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். அதுபோக இப்படத்தில் ஃபஹத் பாசில், ராஷ்மிகா மந்தனா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகிறார்கள். இப்படத்தின் பர்ஸ்ட் பார்ட் கடந்த 2021ம் ஆண்டு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

இப்படத்தை தொடர்ந்து பாலிவுட்டில் ஒரு படத்தில் கமிட்டாகியுள்ளாராம் அல்லு அர்ஜுன். அதாவது, டி-சீரிஸ் தயாரிப்பு நிறுவனம் சார்பில் இயக்குநர் சந்தீப் ரெட்டி வாங்காவின் புதிய படத்தில் தான் அல்லு அர்ஜுன் நடிக்க இருக்கிறார். அதுமட்டுமின்றி இப்படத்தில் நடிக்க அல்லு அர்ஜுன் ரூ.125 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மீண்டும் ஆரம்பமான அதிதியின் ஆட்டம்.., அம்மணிய இனி கைலயே பிடிக்க முடியாது!!!

தென்னிந்திய தமிழ் சினிமாவில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகர்களில் முதலிடத்தை பிடித்துள்ளார் அல்லு அர்ஜுன். கோலிவுட்டில் நடிகர் விஜய்யை விட அல்லு அர்ஜுன் தான் அதிக சம்பளம் வாங்குவது குறிப்பிடத்தக்கது. மேலும் இவரை தொடர்ந்து வேறு யாரெல்லாம் சம்பளத்தை கூட்ட போகிறார்கள் என்று தெரியவில்லை என தயாரிப்பாளர்கள் குழம்பி போய் உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here