வலிமை படத்தின் அடுத்த அப்டேட் வரும்வரை காத்திருங்கள், படப்பிடிப்பின் போது தனக்கு ஏற்பட்ட காயங்களை கூட பொருட்படுத்தாமல் உழைக்கிறார் தல அஜித் என்று நடிகர் அஜித்தின் மேலாளர் கூறியுள்ளார்.
வலிமை
தல என்றாலே அனைவரும் கூறும் பதில் நடிகர் அஜித்குமார் பெயர் தான். தமிழக சினிமா துறைக்கு வரும் புதுமுக நடிகர்களுக்கு முன்னோடியாக திகழ்பவர். அவர் நடித்த படங்கள் உலக அளவிலும் ஹிட்ஆகி உள்ளன. தற்போது அவர் நடித்துக்கொண்டிருக்கும் படம் வலிமை. ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித்தின் 60-வது படமாக உருவாகி வருகிறது ‘வலிமை’.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
போனி கபூர் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய யுவன் சங்கர்ராஜா இசையமைக்கிறார். அதிரடி ஆக்ஷன் காட்சிகளுடன் உருவாகி வரும் இத்திரைப்படத்தில் அஜித் காவல்துறை அதிகாரியாக நடித்து வருவதாகவும் கார், பைக் ரேஸ் காட்சிகள் அதிகம் இடம்பெற உள்ளதாகவும் கூறப்படுகிறது. வலிமை படத்திற்காக அஜித் புது லுக்கிற்கு மாறியுள்ளாராம்.
ஊரடங்கு காலத்தில் திரையரங்குகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. சூர்யாவின் சூரரைப் போற்று திரைப்படம் ஓடிடியில் வெளியானது. மாஸ்டர் படமும் ஓடிடியில் வெளியாகுமா என்ற கேள்விக்கு விளக்கமளித்த தயாரிப்பாளர், மாஸ்டர் படத்தை திரையரங்கிலேயே வெளியிட போவதாக கூறியது. சன் பிக்ச்சர்ஸ் நிறுவனத்துடன் இணைந்து விஜய் நடிக்கவிருக்கும் தளபதி 65 குறித்த அப்டேட்கள் வந்து கொண்டிருக்கின்றன.
தமிழகத்தில் டிசம்பரில் பள்ளிகள் திறப்பு??
மேலும், அனைத்து கதாநாயகர்களின் படம் குறித்து அப்டேட்கள் அவர்களின் ரசிகர்களுக்கும் வந்து கொண்டிருந்தன. ஆனால் நம் தல அஜித்தின் வலிமை படம் பற்றி எந்த ஒரு அறிவிப்பும், அப்டேட் இல்லை, எப்போது அதற்க்கான அப்டேட் வரும் என ரசிகர்கள் சமூகவலை தளங்களில் கேட்டு வருகிறார்கள்.
இதையறிந்த அஜித்தின் மேலாளர், சுரேஷ் சந்திரா அவரது டூவீட்டர் பக்கத்தில் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார். அதில், “ வலிமை படத்தின் அப்டேட் கேட்டு கொண்டு இருக்கும் ரசிகர்களுக்கு .. படப்பிடிப்பில் தனக்கு ஏற்பட்ட காயங்களை கூட பொருட்படுத்தாமல் குறித்த நேரத்தில் படப்பிடிப்பு நடக்க வேண்டும் என்று கடுமையாக உழைக்கும் திரு.அஜித் குமார் அவர்களும் அனுபவமிக்க தயாரிப்பாளரான போனி கபூர் ஆகிய இருவரும் ஒருங்கிணைந்து “வலிமை” படத்தின் அப்டேட் குறித்து முடிவெடுத்து தகுந்த நேரத்தில் வெளியிடுவார்கள். முறையாக அறிவிக்கும் வரை காத்திருக்கவும், அவர்களது முடிவுக்கு மதிப்பு தாருங்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.