திறமையை நிரூபிக்க பறந்து வந்த நடிகர் அஜித் – மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்று அபாரம்!!

0

நடிகர் அஜித், ரைபிள் கிளப்பின் 47 வது மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியில் கலந்து கொள்வதற்காக விமானத்தின் மூலம் திருச்சி வந்து இறங்கியுள்ளார்.

நடிகர் அஜித்:

நடிகர் அஜித், தற்போது வினோத் இயக்கத்தில் 3வது முறையாக AK61 படத்தில் நடித்து வருகிறார். படத்தின் ஷூட்டிங் ஹைதராபாத் உள்ளிட்ட பகுதிகளில் பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், திருச்சி மாநகர ஆயுதப்படை வளாகத்தில், ரைபிள் கிளப்பின் 47 வது மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டிகள், கடந்த 24 ஆம் தேதி முதல் தொடங்கி தற்போது நடைபெற்று வருகிறது.

இந்த போட்டியில் கலந்து கொண்டு, தனது திறமை வெளிப்படுத்துவதற்காக நடிகர் அஜித், விமானத்தின் வாயிலாக இன்று திருச்சி வந்தார். தொடர்ந்து, இன்று காலை இவர் முதல் போட்டியாக சீனியர் மாஸ்டர் பிரிவில் கலந்து கொண்டார். இந்த போட்டிகள் வருகிற 31ம் தேதி வரை நடைபெற உள்ளது.  இதையடுத்து, நடிகர் அஜித் திருச்சி ஏர்போர்ட்டில் வந்திறங்கும் போட்டோ இணையத்தில் வெளியாகி வைரலாகி உள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here