நடிகர் அஜித்குமார் நடித்த துணிவு திரைப்படம் பொங்கலுக்கு வெளியாக இருக்கும் நிலையில், தற்போது அவர் நடித்த நேர்கொண்ட பார்வை படத்தை குறித்து முக்கிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.
நடிகர் அஜித்குமார்:
தமிழ் திரையுலகில் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் தான் நடிகர் அஜித்குமார். தற்போது இயக்குனர் வினோத் படைப்பில் துணிவு திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கான முழு படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், அடுத்த ஆண்டு பொங்கலுக்கு திரைக்கு வருகிறது. இந்த படம் அஜித், வினோத், போனி கபூர் ஆகியோர் கூட்டணியில் வெளியாகும் மூன்றாவது திரைப்படம். அவர்கள் கடந்த 2019ம் ஆண்டு வெளிவந்த நேர்கொண்ட பார்வை படத்தின் மூலம் கூட்டணி வைத்தனர்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
தற்போது இப்படம் குறித்து முக்கிய தகவல் இணையத்தில் வெளியாகியுள்ளது. அதாவது நேர்கொண்ட பார்வை திரைப்படம் தியேட்டரில் வெளியான போது குன்றத்தூரில் உள்ள பரிமளம் தியேட்டர் ரூ 100 டிக்கெட்டை 535 ரூபாய் என அதிக விலைக்கு விற்கப்பட்டது. பொதுவாக ரசிகர்கள் மன்ற சோவுக்கு மட்டுமே இந்த விலை நிர்ணயம் செய்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
வனிதா குறித்து விஜயகுமாரின் மொத்த குடும்பமும் போட்ட கண்டிஷன்.., அதனால் தான் வாயவே தொறக்கலையா??
ஆனால் இந்த தியேட்டரில் நார்மல் தினத்திலும் அதிக விலைக்கு விற்கப்பட்டதால் பாமர மக்களில் ஓருவரான காசிமாயன் என்பவர் அந்த தியேட்டர் மீது வழக்கு தொடர்ந்தார். இன்று விசாரணைக்கு வந்த இந்த வழக்கு காசி மாயனுக்கு சாதகமாக அமைந்துள்ளது. அதாவது பரிமளம் தியேட்டர் உரிமையாளர் 1,20,425 ரூபாய் அபராதமாக செலுத்த வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.