நடிகர் அஜித் குமார் நடிக்கும் துணிவு படத்தின் ஷூட்டிங் முடிந்த நிலையில் அவர் செய்த காரியம் ஒன்று இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
நடிகர் அஜித்குமார்:
கோலிவுட்டில் எண்ணற்ற ரசிகர்களை தன் வசம் வைத்திருக்கும் நடிகர்களில் ஒருவர் தான் நடிகர் அஜித்குமார். இவரது நடிப்பில் தற்போது துணிவு திரைப்படம் உருவாகி வருகிறது. இறுதி கட்டத்தில் இருக்கும் இப்படத்தின் ஷூட்டிங், அடுத்தடுத்து இருக்கும் பணிகளை முடிக்கும் பணியில் படக்குழுவினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.
மேலும் இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு திரை காண இருக்கிறது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நடிகர் அஜித் செய்த காரியம் ஒன்று இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. அது ஒன்னும் இல்லைங்க.
நடிகர் அஜித் ஒரு மூதாட்டியின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கிய வீடியோ ஒன்று தாங்க சமூக சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. எவளோ உயரத்துக்கு போனாலும் பெரியவர்களிடம் கிட்ட அஜித் நடந்துகொள்ளும் விதம் ரசிகர்களை பெருமையடைய செய்துள்ளது.