நடிகர் அஜித்குமார் துணிவு திரைப்படத்தில் நடித்து முடித்த நிலையில் அவருடைய மேனேஜர் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார்.
நடிகர் அஜித்குமார்:
சினிமா துறையில் 30 வருடங்களாக அயராமல் உழைத்து, தற்போது ரசிகர்கள் கொண்டாடி வரும் நபராக இருப்பவர் தான் நடிகர் அஜித்குமார். சமீபத்தில் இவர் நடித்த வலிமை திரைப்படம் வசூலில் நல்ல பெயர் வாங்கினாலும், விமர்சனத்தில் வரவேற்பை பெறவில்லை. தற்போது வலிமை பட இயக்குனரான வினோத்துடன் சேர்ந்து துணிவு திரைப்படத்தில் நடித்து முடித்திருக்கிறார்.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
அது போக நடிகை மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி போன்ற நட்சத்திரங்கள் முக்கிய ரோலில் நடித்துள்ளனர். மேலும் இப்படத்தை ரெட் ஜெயிண்ட் மூவிஸ் திரையரங்குகளில் வெளியிட இருக்கிறது. அதுமட்டுமின்றி அடுத்த மாதம் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நடிகர் அஜித் மேனேஜர் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார்.
ஹேமாவால் தீர்க்கமான முடிவை எடுத்த பாரதி.., கேள்விக்குறியாகும் கண்ணம்மாவின் நிலை??
அதாவது நடிகர் அஜித் தன்னுடைய மேனேஜருக்கு வாட்ஸ் அப்பில் ஒரு மெசேஜ் அனுப்பியுள்ளார். அந்த மெசேஜில் No Drama No Negativity என்று அளவு கடந்த அன்பை மேனேஜர் மீது வெளிக்காட்டியுள்ளார். தற்போது அந்த மெசேஜ் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. மேலும் துணிவு படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வர இருப்பது குறிப்பிடத்தக்கது.