தமிழ் திரையுலகின் உச்சகட்ட நடிகரான அஜித் தற்போது கொரோனா நிவாரண நிதியாக ரூ25 லட்சம் நிதியை தமிழக அரசுக்குக்கு அளித்துள்ளார். பலரும் அவரை பாராட்டி வருகின்றனர்.
தல அஜித்
தற்போது தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மேலும் முதல்வர் ஸ்டாலின் மே 10 முதல் 24 வரை ஊரடங்கு பிறப்பித்துள்ளார். மேலும் இதற்கு நிவாரண நிதியாக தமிழக மக்களுக்கு ரூ.4000 வழங்கி வருகிறார். இந்நிலையில் மக்கள் பலரும் வேலையில்லாமல் திண்டாடி வருகின்றனர்.
இந்த கொரோனாவை அழிக்க அரசும் பல கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தடுப்பு மருந்துகளும் மக்களுக்கு அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நெருக்கடியான சூழலில் பலரும் தமிழக அரசுக்கு நிதியுதவி அளித்தும் வருகின்றனர். ஏற்கனவே சிவகுமார் குடும்பம் தமிழக அரசுக்கு ரூ.1 கோடி அளித்திருந்தனர்.
இந்நிலையில் தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக திகழும் அஜித் கொரோனா நிவாரண நிதியாக ரூ.25 லட்சம் நிதியாக அளித்துள்ளார். ஏற்கனவே மக்கள் தல என்று கொண்டாடி வருவர். இந்நிலையில் அவரின் ரசிகர்கள் பலரும் இவரின் செய்கையால் பெருமிதத்தில் உள்ளனர். இந்த செய்தி காட்டுத்தீ போல இணையத்தில் வைரலாகி வருகிறது.