கன்னட சினிமாவில் பிரபல நடிகராக வளம் வருபவர் அஜய் ராவ். தற்போது போலீசார் இவர் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு தளத்தில் சண்டை கலைஞர் பலியான வழக்கு தொடர்பாக அஜய் ராவிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.
நடிகர் அஜய் ராவ், கன்னடத்தில் Excuse me, கிருஷ்ணா டாக்கீஸ், தைர்யம் போன்ற வெற்றி படங்களை தந்தவர். இவர் தற்போது நடித்து கொண்டிருக்கும் படம் லவ் யூ ரச்சு. இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு கர்நாடகா மாவட்டத்தில் உள்ள ராமநகர் மாவட்டத்தில் நடைபெற்று வருகிறது.
ஆனால் அந்த தளத்தில் துரதிருஷ்ட வசமாக மின்சாரம் தாக்கி சண்டை கலைஞரான விவேக் பலியாகி உள்ளார். இதனால் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து அந்த படத்தின் இயக்குனர் உள்பட 4 பேரை கைது செய்யப்பட்டு தற்போது சிறையில் உள்ளனர்.
மேலும் நடிகர் அஜய் ராவ்வையும் போலீஸ் விசாரணைக்கு ஆஜராகும்படி காவல் துறையினர் நோட்டீஸ் அனுப்பி உள்ளனர். இந்நிலையில் விசாரணைக்கு ஆஜரான நடிகரிடம் படப்பிடிப்பின் போது சண்டை கலைஞரை மின்சாரம் தாக்கியது எப்படி?, முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லையா? போன்ற கேள்விகள் கேக்கப்பட்டு விசாரணை நடத்தி உள்ளனர்.
ஸ்டண்ட் கலைஞர் மின்சாரம் தாக்கி பலியான வழக்கில் நடிகர் அஜய் ராவ், ப்ரோடியுசர் ஆகியோருக்கு முன் ஜாமீன் கிடைத்துள்ளது. அதே சமயம் இயக்குனர் உள்பட கைதான மூன்று பேருக்கும் நிபந்தனை ஜாமீன் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்