மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பல நலத்திட்ட உதவிகளையும், வேலைவாய்ப்பு முகாம்களையும் தமிழக அரசு ஏற்படுத்தி வருகிறது. அரசு அவர்களுக்கு தேவையான நலத்திட்டங்களை செய்தாலும் பொது இடங்களில் மாற்றுத்திறனாளிகள் அவமதிக்கப்படும் சம்பவம் தொடர்ந்து அரங்கேறி தான் வருகிறது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
கடந்த மாதம் கூட சென்னை கோயம்பேடு பேருந்து நிறுத்தத்தில் மாற்றுத்திறனாளி கிரிக்கெட் வீரர் சச்சின் தமிழக அரசுக்கு சொந்தமான கழிப்பறை வசதியுடன் கூடிய பஸ்ஸில் பயணிப்பதற்காக ஏறியுள்ளார். ஆனால் அவரை நடத்துனர் பேருந்தில் ஏற்றாமல் மரியாதை குறைவாக பேசியது சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சையை கிளப்பியது. இதனால் அந்த நடத்துனரை பணியிடை நீக்கம் கூட செய்தனர்.
TNPSC Group 1 2 & 2A தேர்வர்கள் கவனத்திற்கு…, உங்களுக்காகவே வெளியான முக்கிய அறிவிப்பு!!
ஆனால் இது போன்ற செயல் மீண்டும் நடப்பதாக குற்றங்கள் வந்துகொண்டே இருந்துள்ளது. இந்நிலையில் மாற்றுத்திறனாளிகள் நல ஆணையரகத்தில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில் ஆணையர் ஜெசிந்தா லாசரஸ் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது இனி வரும் நாட்களில் அரசு அலுவலங்கங்கள் மற்றும் பொது இடங்களில் மாற்றுத்திறனாளிகள் அவமதிக்கப்பட்டால் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார்.