இந்திய மல்யுத்த கூட்டமைபின் தலைவர் பிரிஜ் பூஷன் மீது மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டினை கடந்த ஜனவரி மாதம் கொடுத்திருந்தனர். அவரை கைது செய்ய போதிய ஆதாரம் இல்லை என சொல்லிய டெல்லி போலீசார் அவரை கைது செய்ய மறுத்திருந்தனர். இதனால் தர்ணா போராட்டத்தில் இறங்கிய வீராங்கனைகள் நீதி கேட்டு 4 மாதங்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
இவரகளுக்கு ஆதரவு கொடுக்கும் வகையில் பல திரை பிரபலங்கள் குரல் கொடுத்தும் வருகின்றனர். அந்த வகையில் மல்யுத்த வீராங்கனைகளுக்கு ஆதரவு கொடுக்கும் வகையில் கோலிவுட் திரை நடிகையான சாக்ஷி அகர்வால் பேட்டியாளர் சந்திப்பில் சில வார்த்தைகள் பேசியுள்ளார். அதில் இவர் பேசியதாவது, டெல்லியில் தீவிரமாக போய்க் கொண்டிருக்கும் வீராங்கனைகளின் பிரச்சனையை துறை சார்ந்த அதிகாரிகள் கவனம் செலுத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கிரிக்கெட் வாழ்க்கையில் 13 ஆண்டை கடந்த அஸ்வின்…, உலகின் நம்பர் 1. வீரராக மாறி அசத்தல்!!
நம் நாட்டில் பெண்கள் முன்னேற்றத்திற்காக பல விஷயங்களை அரசு எடுத்து வருகிறது. அந்த வகையில் தொடர்ந்து பெண்கள் பாலியல் தொல்லை உள்ளாக்குவது குறித்து கவனம் செலுத்தி அதற்கெதிராக நடவடிக்கை எடுக்கும் வேண்டும். அப்போது தான் ஒரு சிறந்த நாட்டை நாம் உருவாக்கவோ, அதனை எதிர்பாராகவோ முடியும் என கூறியுள்ளார்.