தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களில் நடப்பு கல்வியாண்டுக்கான தேர்வுகள் இன்னும் சில மாதங்களில் முடிவடைய உள்ளது. இதனால் தனியார் பள்ளிகளில் அடுத்த கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கைகள் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. ஆனால் சில தனியார் பள்ளிகள் அரசு விதித்த விதிமுறைகளை மீறி கூடுதல் கட்டணங்களை வசூல் செய்கின்றனர்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
எனவே இது தொடர்பான நடவடிக்கைகள் குறித்து புதுச்சேரி சட்டசபையில் விவாதிக்கப்பட்டது. இதற்கு பதிலளித்த அமைச்சர் நமச்சிவாயம், “புதுச்சேரி கல்வித்துறையில் புதிய கல்விக் கொள்கையின் படி அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில் 2022-25ம் கல்வியாண்டுக்கான கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஓர் அணிக்கு எதிராக இவ்வளவு சராசரியா?? ஆஸ்திரேலியாவை அச்சுறுத்தும் ஹர்திக் பாண்டியா!!
எனவே இதைவிட கூடுதல் கட்டணங்களை வசூலிக்கும் பள்ளிகளை ஆய்வு செய்ய குழு அமைத்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்த குழுவின் ஆய்வறிக்கை மற்றும் பெற்றோர்களின் புகார் மனுக்களை சென்னை ஐகோர்ட்டில் ஓய்வுபெற்ற நீதிபதிகளை கொண்ட குழு விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும்.” என தெரிவித்துள்ளார்.