அனைத்து விதமான கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற CSK வீரர் ராயுடு…..,ட்விட்டரில் பதிவு….,

0
அனைத்து விதமான கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற CSK வீரர் ராயுடு.....,ட்விட்டரில் பதிவு....,
அனைத்து விதமான கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற CSK வீரர் ராயுடு.....,ட்விட்டரில் பதிவு....,

நேற்று நடைபெற்று முடிவடைந்த IPL 2023 போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அபாரமாக வெற்றி பெற்று தனது 5 ஆவது IPL கோப்பையை கைப்பற்றியது. இந்த ஆட்டத்திற்கு பிறகு கிரிக்கெட்டின் அனைத்து விதமான போட்டிகளிலும் இருந்து ஓய்வு பெறப்போவதாக சென்னை அணியின் வீரர் ராயுடு அறிவித்திருந்தார்.

குறிப்பாக, நேற்று நடைபெற்ற போட்டியிலும் சென்னை அணி வெற்றி பெற்றதற்கு அம்பதி ராயுடு முக்கிய பங்காற்றி இருந்தார். தொடர்ந்து, கோப்பையை பெறும் போது கூட தோனி அதனை அம்பதி ராயுடுவுக்கு கொடுத்து அவரது ஓய்வை சிறப்பான நெகிழ்வாக்கி இருந்தார்.

நடிகர் மாதவனுக்கு சிறந்த இயக்குனருக்கான விருது….,உற்சாகத்தில் ரசிகர்கள்….,

இந்த நிலையில், ஏற்கனவே அறிவித்தபடி ராயுடு தனது ஓய்வு அறிவிப்பை ட்விட்டர் பதிவின் மூலம் தற்போது வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் தனக்கு வாய்ப்பளித்த மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு தனது நன்றிகளை தெரிவித்துள்ளார் அம்பதி ராயுடு. இந்த பதிவு தற்போது ரசிகர்களின் கவனம் பெற்று வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here