பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான அனிதா சம்பத் தற்போது பிபி ஜோடிகள் நிகழ்ச்சியில் டைட்டிலை கைப்பற்றியுள்ள நிலையில் அவருக்கு வாழ்த்து கூறியுள்ளார் ஆரி. அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.
ஒரே எபிசோடில் நம்பர் ஒன் இடத்தை பிடித்த பாண்டியன் ஸ்டோர்ஸ் – ரசிகர்கள் வாழ்த்து மழை!!
அனிதா சம்பத்
சன் டிவியில் செய்தி வாசிப்பாளராக பணிபுரிந்து வந்த அனிதா சம்பத் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானார். ஆரம்பத்தில் அவரது திறமைகளை காட்டி வரவேற்பை பெற்று வந்த அனிதாவின் குணம் நாளுக்கு நாள் மாற தொடங்கியது. எதற்கெடுத்தாலும் அழுக ஆரம்பிப்பது, வாக்குவாதத்தில் ஈடுபடுவது, சண்டை போடுவது இதுவே வேலையாக வைத்திருந்தார்.
ஒரு கட்டத்திற்கு மேல் அனைவரையும் முகம் சுளிக்க வைத்தது. வீட்டை விட்டே வெளியேறிய அவருக்கு அதை விட பெரிய ஷாக் காத்திருந்தது. அவரது அப்பாவின் இழப்பை அவரால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. இப்பொழுது அவர் பிபி ஜோடிகள் நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டு டைட்டிலையும் கைப்பற்றினார். அவரது ஆருயிர் அண்ணனான ஆரி இத்தனை நாளுக்கு பிறகு வாழ்த்து தெரிவித்துள்ளார். அதுவும் வாழ்த்து சொல்லும்’ நேரம் தாமதம் ஆகலாம், ஆனால் பாசம் தாமதமாகாது என்று கூறியுள்ளார்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்