நியூசிலாந்துக்கு எதிரான கடைசி போட்டியில், சஞ்சு சாம்சன் களமிறங்க வில்லை என்றால், பல்வேறு விமர்சனங்கள் எழும் என ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார்.
சஞ்சு சாம்சன்:
இந்திய அணி நியூசிலாந்துக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டியில், இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்திடம் தோல்வியை தழுவி இருந்தது. இதனால், 2வது போட்டியை வென்றால் மட்டுமே தொடரை கைப்பற்றும் நிலை இருந்தது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
ஆனால், 2வது போட்டியானது மழை காரணமாக கைவிடப்பட்டது. இதன் விளைவால், நாளை நடைபெற இருக்கும் கடைசி போட்டியை இந்தியா வெற்றி பெற்று தொடரை சமன் செய்ய முயற்சிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்த தொடரின் முதல் போட்டியில், தனது திறமையால் பல ரசிகர்களின் ஆதரவு பெற்ற சஞ்சு சாம்சன் பிளேயிங் லெவனில் இடம் பிடித்திருந்தார். இந்த போட்டியில், சஞ்சு சாம்சன் 4 பவுண்டரி உட்பட 36 ரன்களை எடுத்திருந்தார்.
ஒரு வெற்றிக்காக 700 கைதிகள் விடுவிப்பு…, உலக கோப்பையில் தொடரும் சுவாரசியமான சம்பவம்!!
இவருக்கு, 2 வது போட்டியில் வாய்ப்பு அளிக்கப்படவில்லை. இந்நிலையில், முன்னாள் வீரரான ஆகாஷ் சோப்ரா, அடுத்த போட்டிகளில், சஞ்சு சாம்சனை விளையாட வையுங்கள். இல்லையென்றால், பல விமர்சனங்கள் எதிர்கொள்ள தயாராக இருங்கள் என்று கருத்து தெரிவித்துள்ளார். இதற்கிடையில், FIFA உலக கோப்பை நடைபெறும் மைதானத்தில், சஞ்சு சாம்சன் ரசிகர் ஒருவர், “Lots of love from Qatar, we support” சஞ்சு சாம்சன் என போஸ்ட்டருடன் ரசிகர்கள் ஆதரவு குரல் கொடுத்துள்ளனர்.